mardi 28 mai 2013

வெலிக்கடைச்சிறைப் படுகொலையின் 30வது ஆண்டு நினைவுக்கான ஆவணசேகரிப்பு !

கடந்த 1983 யூலை மாதம் 25ம்; 27ம் திகதிகளில் வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலையின் 30வது ஆண்டு நினைவையொட்டி,படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஆவணச் சேகரிப்பு ஒன்றினை மேற்கொள் வதற்கான  முயற்சியில் இலங்கையர் ஓருமைப்பாட்டு மையம் ஈடுபட்டுள்ளது
 அன்று படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான குறிப்புகள்; கடிதங்கள்; புகைப்படங்கள் மற்றும் சாட்சியங்களாக இருக்கும் நபர்கள் போன்ற விபரங்களைத் தந்துதவுமாறும் .அத்துடன் தற்போது அரசியற் காரணங்களால் சிறை வைக்கப்பட்டிருப்பவர்கள் பற்றிய தெரிந்த விபரங்களையும் தந்துதவுமாறு சார்ந்தவர்களின் உறவினர்கள் நண்பர்கள் சமூகஆவலர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
இதனை ஒரு பொதுப் பணியாகக் கருத்தில் எடுத்து அனைவரும் தங்களால் இயன்ற ஒத்துழைப்பினை வழங்குவதுடன் இத்தகவலை அனைவருக்கும் பகிர்ந்துகொள்ளவும்
. இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம்
தொடர்பு
     centre.solidarite.srilankais@gmail.com      tel:- (33) 07 51 41 33 05.
Facebook :   CENTRE  DE  SOLIDARITE  DES  SRILANKAIS

Aucun commentaire:

Enregistrer un commentaire